நூல்கள்›நற்றிணை›பாடல் 1432

பாடல் 1432

செம்பியனார்

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!

அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,

நின் குறை முடித்த பின்றை, என் குறை

செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;

பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, . . . .

நின் கிளை மருங்கின், சேறிஆயின்,

அம் மலை கிழவோற்கு உரைமதி- இம் மலைக்

கானக் குறவர் மட மகள்

ஏனல் காவல் ஆயினள் எனவே.

குறிஞ்சி

← பாடல் 1431பாடல் 1433 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்