நூல்கள்›நற்றிணை›பாடல் 1429

பாடல் 1429

இளந்திரையனார்

'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,

அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்

தாம் வரத் தௌத்த பருவம் காண்வர

இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, . . . .

மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை

பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்

கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-

பிடவமும், கொன்றையும் கோடலும்-

மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. . . . .

முல்லை

← பாடல் 1428பாடல் 1430 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்