நூல்கள்›நற்றிணை›பாடல் 1428

பாடல் 1428

உக்கிரப் பெருவழுதி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்

>செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி

ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி

நூழை நுழையும் பொழுதில், தாழாது

பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, . . . .

மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்

கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!

எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்

துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,

இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- . . . .

வைகலும் பொருந்தல் ஒல்லாக்

கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

குறிஞ்சி

← பாடல் 1427பாடல் 1429 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்