நூல்கள்›நற்றிணை›பாடல் 1426

பாடல் 1426

கோக்குளமுற்றனார்

'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,

புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,

புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,

பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,

புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் . . . .

துவரினர் அருளிய துறையே; அதுவே,

கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்

அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,

தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு

உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, . . . .

பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

நெய்தல்

← பாடல் 1425பாடல் 1427 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்