நூல்கள்›நற்றிணை›பாடல் 1425

பாடல் 1425

கோட்டம்பலவனார்

கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,

ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,

அதவத் தீம் கனி அன்ன செம் முகத்

துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,

கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, . . . .

குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்

குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;

சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;

கொடிச்சி கையகத்ததுவே, பிறர்

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1424பாடல் 1426 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்