நூல்கள்›நற்றிணை›பாடல் 1423

பாடல் 1423

மலையனார்

'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,

வரை வெள் அருவி மாலையின் இழிதர,

கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்

மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்

பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! . . . .

செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!

மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,

நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்

பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய

பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் . . . .

மயிர்க் கண் முரசினோரும் முன்

உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

குறிஞ்சி

← பாடல் 1422பாடல் 1424 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்