நூல்கள்›நற்றிணை›பாடல் 1415

பாடல் 1415

நல்விளக்கனார்

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,

வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,

அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,

குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்

கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், . . . .

ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி

வாரற்கதில்ல- தோழி!- சாரல்

கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,

தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு

காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் . . . .

ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!

குறிஞ்சி

← பாடல் 1414பாடல் 1416 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்