நூல்கள்›நற்றிணை›பாடல் 1414

பாடல் 1414

ஆசிரியர் அறியப்படவில்லை

கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,

திதலை அல்குலும் பல பாராட்டி,

நெருநலும் இவணர் மன்னே! இன்றே,

பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்

மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், . . . .

சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற

பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன

உவர் எழு களரி ஓமை அம் காட்டு,

வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்

ஏகுவர் என்ப, தாமே- தம்வயின் . . . .

இரந்தோர் மாற்றல் ஆற்றா

இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.

பாலை

← பாடல் 1413பாடல் 1415 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்