நூல்கள்›நற்றிணை›பாடல் 1413

பாடல் 1413

பெருந்தேவனார்

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய

கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,

தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,

வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், . . . .

எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;

எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்

துஞ்சாது அலமரு பொழுதின்,

அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.

குறிஞ்சி

← பாடல் 1412பாடல் 1414 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்