நூல்கள்›நற்றிணை›பாடல் 1409

பாடல் 1409

கண்ணகனார்

'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,

கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்

மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்

ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்

பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் . . . .

பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'

என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;

செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-

அம்ம! வாழி, தோழி!-

யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? . . . .

பாலை

← பாடல் 1408பாடல் 1410 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்