நூல்கள்›நற்றிணை›பாடல் 1408

பாடல் 1408

கீரங்கீரனார்

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி

மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,

வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,

படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, . . . .

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;

கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி

வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,

புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா

வலவன் கோல் உற அறியா, . . . .

உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

நெய்தல்

← பாடல் 1407பாடல் 1409 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்