நூல்கள்›நற்றிணை›பாடல் 1407

பாடல் 1407

கபிலர்

மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்

பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்

அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு

உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்

சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் . . . .

சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்

ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்

ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்

வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை

அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், . . . .

திதலை அல்குல், குறுமகள்

குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

குறிஞ்சி

← பாடல் 1406பாடல் 1408 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்