நூல்கள்›நற்றிணை›பாடல் 1404

பாடல் 1404

உலோச்சனார்

வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை

இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,

நிறையப் பெய்த அம்பி, காழோர்

சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்

சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, . . . .

'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ்

புது மணற் கானல் புன்னை நுண் தாது,

கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்

வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்

கண்டல் வேலிய ஊர், 'அவன் . . . .

பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!

நெய்தல்

← பாடல் 1403பாடல் 1405 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்