நூல்கள்›நற்றிணை›பாடல் 1403

பாடல் 1403

மூலங்கீரனார்

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன

மாணா விரல வல் வாய்ப் பேஎய்

மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,

மன்றம் போழும் புன்கண் மாலை,

தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் . . . .

செல்ப என்ப தாமே- செவ் அரி

மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்

செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்

பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்

நுதற் கவின் அழிக்கும் பசலையும், . . . .

அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

பாலை

← பாடல் 1402பாடல் 1404 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்