நூல்கள்›நற்றிணை›பாடல் 1402

பாடல் 1402

இளம்போதியார்

'பேணுப பேணார் பெரியோர்' என்பது

நாணு தக்கன்று அது காணுங்காலை;

உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்

நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது

அழிதக்கன்றால் தானே; கொண்கன், . . . .

'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற்

பிரிதல் சூழான்மன்னே; இனியே

கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,

அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால்,

'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா . . . .

அஞ்சுவல்- தோழி!- என் நெஞ்சத்தானே!

நெய்தல்

← பாடல் 1401பாடல் 1403 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்