நூல்கள்›நற்றிணை›பாடல் 1401

பாடல் 1401

வண்ணப்புறக் கந்தரத்தனார்

மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை

வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப்

பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என,

விடுநள் ஆதலும் உரியள்; விடினே,

கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, . . . .

பிரிதல் வல்லிரோ- ஐய! செல்வர்

வகை அமர் நல் இல் அக இறை உறையும்

வண்ணப் புறவின் செங் காற் சேவல்

வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்

நும் இலள் புலம்பக் கேட்டொறும் . . . .

பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?

பாலை

← பாடல் 1400பாடல் 1402 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்