நூல்கள்›நற்றிணை›பாடல் 1399

பாடல் 1399

சேகம்பூதனார்

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,

சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,

பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்

மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,

முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் . . . .

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,

மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,

கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,

ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் . . . .

இனையவாகித் தோன்றின்,

வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!

முல்லை

← பாடல் 1398பாடல் 1400 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்