நூல்கள்›நற்றிணை›பாடல் 1397

பாடல் 1397

பேரி சாத்தனார்

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்

மால் வரை மறைய, துறை புலம்பின்றே;

இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு

வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய

கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; . . . .

கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்

துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,

எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,

எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,

தங்கின் எவனோதெய்ய- பொங்கு பிசிர் . . . .

முழவு இசைப் புணரி எழுதரும்

உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

நெய்தல்

← பாடல் 1396பாடல் 1398 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்