நூல்கள்›நற்றிணை›பாடல் 1395

பாடல் 1395

கபிலர்

அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-

கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்

கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,

ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,

புலியொடு பொருத புண் கூர் யானை . . . .

நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்

விற் சுழிப்பட்ட நாமப் பூசல்

உருமிடைக் கடி இடி கரையும்

பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே.

குறிஞ்சி

← பாடல் 1394பாடல் 1396 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்