நூல்கள்›நற்றிணை›பாடல் 1393

பாடல் 1393

உலோச்சனார்

உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,

கல்லென் சேரிப் புலவற் புன்னை

விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்

அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், . . . .

அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,

பசலை ஆகி விளிவதுகொல்லோ-

புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்

கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி

திரை தரு புணரியின் கழூஉம் . . . .

மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

நெய்தல்

← பாடல் 1392பாடல் 1394 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்