நூல்கள்›நற்றிணை›பாடல் 1392

பாடல் 1392

இளங்கீரனார்

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை

கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன

என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,

குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,

உள்ளினென் அல்லெனோ யானே- 'முள் எயிற்று, . . . .

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,

எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,

உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப

உலவை ஆகிய மரத்த

கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? . . . .

பாலை

← பாடல் 1391பாடல் 1393 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்