நூல்கள்›நற்றிணை›பாடல் 1379

பாடல் 1379

நெய்தல் தத்தனார்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்

தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;

முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்

படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;

கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, . . . .

எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச்

சென்று நாம் அறியின், எவனோ- தோழி!

மன்றப் புன்னை மாச் சினை நறு வீ

முன்றில் தாழையொடு கமழும்

தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? . . . .

நெய்தல்

← பாடல் 1378பாடல் 1380 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்