நூல்கள்›நற்றிணை›பாடல் 1376

பாடல் 1376

ஆசிரியர் அறியப்படவில்லை

வைகல்தோறும் இன்பமும் இளமையும்

எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;

காணீர் என்றலோ அரிதே; அது நனி

பேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழி

பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் . . . .

அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,

பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,

வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,

எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,

நன் வாய் அல்லா வாழ்க்கை . . . .

மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.

பாலை

← பாடல் 1375பாடல் 1377 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்