நூல்கள்›நற்றிணை›பாடல் 1372

பாடல் 1372

கீரத்தனார்

மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய

பழ மழை பொழிந்த புது நீர் அவல

நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை

மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், . . . .

'ஏகுமின்' என்ற இளையர் வல்லே

இல் புக்கு அறியுநராக, மெல்லென

மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,

சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய

அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ . . . .

அவிழ் பூ முடியினள் கவைஇய

மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

முல்லை

← பாடல் 1371பாடல் 1373 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்