நூல்கள்›நற்றிணை›பாடல் 1365

பாடல் 1365

அம்மூவனார்

பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்

புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி

கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்

பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் . . . .

இரை தேர் நாரை எய்தி விடுக்கும்

துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்

பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;

உழையின் போகாது அளிப்பினும், சிறிய

ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் . . . .

கள்களி செருக்கத்து அன்ன

காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!

நெய்தல்

← பாடல் 1364பாடல் 1366 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்