நூல்கள்›நற்றிணை›பாடல் 1364

பாடல் 1364

பிரமசாரி

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

பறியாக் குவளை மலரொடு காந்தள்

குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,

பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன் இயத்து ஆடும் நாடன் . . . .

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்

நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,

கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,

வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!

கடவுள் ஆயினும் ஆக, . . . .

மடவை மன்ற, வாழிய முருகே!

குறிஞ்சி

← பாடல் 1363பாடல் 1365 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்