நூல்கள்›நற்றிணை›பாடல் 1363

பாடல் 1363

இளவேட்டனார்

'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,

முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,

புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,

கல்லுடைப் படுவில் கலுழி தந்து,

நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், . . . .

துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்

அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,

இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்

வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என

விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, . . . .

நல் அக வன முலைக் கரை சேர்பு

மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

பாலை

← பாடல் 1362பாடல் 1364 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்