நூல்கள்›நற்றிணை›பாடல் 1362

பாடல் 1362

கபிலர்

'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்

வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;

நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, . . . .

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு

அரிய- வாழி, தோழி!- பெரியோர்

நாடி நட்பின் அல்லது,

நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.

குறிஞ்சி

← பாடல் 1361பாடல் 1363 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்