நூல்கள்›நற்றிணை›பாடல் 1361

பாடல் 1361

நக்கீரனார்

மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,

சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை

பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்

தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்

சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; . . . .

பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,

யானும் இனையேன்- ஆயின், ஆனாது

வேறு பல் நாட்டில் கால் தர வந்த

பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்

நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு . . . .

உலவுத் திரை ஓதம் வெரூஉம்

உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

நெய்தல்

← பாடல் 1360பாடல் 1362 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்