நூல்கள்›நற்றிணை›பாடல் 1359

பாடல் 1359

பூதனார்

நின்ற வேனில் உலந்த காந்தள்

அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,

ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,

மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,

புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி . . . .

யாங்கு வல்லுநள்கொல்தானே- யான், 'தன்

வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என

நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்

பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,

வெய்ய உயிர்க்கும் சாயல், . . . .

மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே?

பாலை

← பாடல் 1358பாடல் 1360 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்