நூல்கள்›நற்றிணை›பாடல் 1358

பாடல் 1358

முதுகூற்றனார்

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,

தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.

அன்னை போல இனிய கூறியும்,

கள்வர் போலக் கொடியன்மாதோ-

மணி என இழிதரும் அருவி, பொன் என . . . .

வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,

ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்

ஓடு மழை கிழிக்கும் சென்னி,

கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

பாலை

← பாடல் 1357பாடல் 1359 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்