நூல்கள்›நற்றிணை›பாடல் 1357

பாடல் 1357

குடவாயிற் கீரத்தனார்

நீயும் யானும், நெருநல், பூவின்

நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,

ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்

கழி சூழ் கானல் ஆடியது அன்றி,

கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், . . . .

பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்

எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு

இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்

கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,

கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல . . . .

சிறு பாசடைய நெய்தல்

குறுமோ, சென்று' எனக் கூறாதோளே.

நெய்தல்

← பாடல் 1356பாடல் 1358 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்