நூல்கள்›நற்றிணை›பாடல் 1353

பாடல் 1353

கணக்காயனார்

தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;

வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,

இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள

அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,

காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் . . . .

முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்

சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்

தெண் நீர் மலரின் தொலைந்த

கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

குறிஞ்சி

← பாடல் 1352பாடல் 1354 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்