நூல்கள்›நற்றிணை›பாடல் 1354

பாடல் 1354

கணக்காயனார்

'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு

உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,

ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,

கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் . . . .

சேறும், நாம்' எனச் சொல்ல- சேயிழை!-

'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;

செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

பாலை

← பாடல் 1353பாடல் 1355 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்