நூல்கள்›நற்றிணை›பாடல் 1352

பாடல் 1352

ஆசிரியர் அறியப்படவில்லை

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை

முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி

கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,

அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்

திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, . . . .

வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்

கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்

வந்தனன்; வாழி- தோழி!- உலகம்

கயம் கண் அற்ற பைது அறு காலை,

பீளொடு திரங்கிய நெல்லிற்கு . . . .

நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

குறிஞ்சி

← பாடல் 1351பாடல் 1353 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்