நூல்கள்›நற்றிணை›பாடல் 1351

பாடல் 1351

மருதன் இளநாகனார்

விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்

அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,

வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!

தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு

ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- . . . .

உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன

அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்

காமரு தகைய கானவாரணம்

பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்

புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, . . . .

நாள் இரை கவர மாட்டி, தன்

பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

முல்லை

← பாடல் 1350பாடல் 1352 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்