நூல்கள்›அகநானூறு›பாடல் 1948

பாடல் 1948

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்

தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல

வண்ணம் வாடிய வரியும், நோக்கி,

ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்

ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் . . . .

செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்

பராரை நெல்லி அம் புளித் திரள் காய்

கான மட மரைக் கணநிரை கவரும்

வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,

விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் . . . .

பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த

அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்

நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்

மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்

சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் . . . .

அம்புடைக் கையர் அரண் பல நூறி,

நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்

சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்

தலை நாள் அலரின் நாறும் நின்

அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1947பாடல் 1949 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்