நூல்கள்›அகநானூறு›பாடல் 1936

பாடல் 1936

நக்கீரர்

சிறு பைந் தூவிச் செங் காற் பேடை

நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,

வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,

பெறு நாள் யாணர் உள்ளிப், பையாந்து,

புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் . . . .

குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்

இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,

பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்

குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,

யாமே எமியம்ஆக, தாமே . . . .

பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்

பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்

வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ

கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்

முதுநீர் முன்துறை முசிறி முற்றி . . . .

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்

அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,

பானாட் கங்குலும் பகலும்

ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?

களிற்றியானை நிரை

← பாடல் 1935பாடல் 1937 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்