நூல்கள்›அகநானூறு›பாடல் 1893

பாடல் 1893

ஒக்கூர் மாசாத்தனார்

'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,

காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்

ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு

மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய

அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ . . . .

திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,

முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்

குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்

வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற . . . .

கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்

மாலையும் உள்ளார் ஆயின், காலை

யாங்கு ஆகுவம் கொல்? பாண!' என்ற

மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,

செவ்வழி நல் யாழ் இசையினென், பையென . . . .

கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,

அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே

விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,

கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்

கார் மழை முழக்கு இசை கடுக்கும் . . . .

முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.

களிற்றியானை நிரை

← பாடல் 1892பாடல் 1894 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்