நூல்கள்›அகநானூறு›பாடல் 1891

பாடல் 1891

கபிலர்

யாயே, கண்ணினும் கடுங் காதலளே;

எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,

எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;

யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,

இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; . . . .

ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,

கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,

விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,

குறவர் ஊன்றிய குரம்பை புதைய,

வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் . . . .

புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,

மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்

நல் வரை நாட! நீ வரின்,

மெல்லியல் ஓரும் தான் வாழலளே

களிற்றியானை நிரை

← பாடல் 1890பாடல் 1892 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்