நூல்கள்›கலித்தொகை›பாடல் 1829

பாடல் 1829

ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,

வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,

நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக்

காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,

மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து . . . .

யாண்டோ ரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல்

பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான்

நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள்

பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்; . . . .

'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும்

இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான்

கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்

இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்;

'உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல், . . . .

முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான்

அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள்

பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்;

ஆங்கு

தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; . . . .

இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என,

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே.

மருதக் கலி

← பாடல் 1828பாடல் 1830 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்