நூல்கள்›கலித்தொகை›பாடல் 1774

பாடல் 1774

விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,

கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,

அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,

பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்

உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, . . . .

நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,

சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்

மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ

புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி . . . .

பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை;

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்

அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ

கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி

தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை; . . . .

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த

விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ

யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி

காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை;

என ஆங்கு, . . . .

தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி

மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,

பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்

உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1773பாடல் 1775 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்