நூல்கள்›கலித்தொகை›பாடல் 1742

பாடல் 1742

செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,

எரி வெந்த கரி வறல்வாய், புகுவ காணாவாய்,

பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,

திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,

மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, . . . .

உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,

ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது,

சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும்

புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம்

எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் . . . .

மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை

அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல,

கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ?

நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின்,

இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் . . . .

துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை

விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?

கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,

தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட,

முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த . . . .

வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ?

என ஆங்கு,

அனையவை காதலர் கூறலின், 'வினைவயிற்

பிரிகுவர்' எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ;

கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது, . . . .

கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர்

நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே

பாலைக் கலி

← பாடல் 1741பாடல் 1743 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்