நூல்கள்›நற்றிணை›பாடல் 1688

பாடல் 1688

நக்கீரர்

'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,

சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,

இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,

நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம்,

அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என . . . .

கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,

பரவினம் வருகம் சென்மோ - தோழி!

பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்

சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்

பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் . . . .

அரும் பெறல் ஆய் கவின் தொலைய,

பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

நெய்தல்

← பாடல் 1687பாடல் 1689 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்