நூல்கள்›நற்றிணை›பாடல் 1686

பாடல் 1686

பரணர்

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த

விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,

பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி

வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்

வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் . . . .

அசைவு இல் நோன் பறை போல, செல வர

வருந்தினை - வாழி, என் உள்ளம்! - ஒரு நாள்

காதலி உழையளாக,

குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?

குறிஞ்சி

← பாடல் 1685பாடல் 1687 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்