நூல்கள்›நற்றிணை›பாடல் 1609

பாடல் 1609

கயமனார்

வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்

தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,

வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,

நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,

நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு . . . .

பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,

பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை

வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,

அதர் உழந்து அசையினகொல்லோ - ததர்வாய்ச்

சிலம்பு கழீஇய செல்வம் . . . .

பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

பாலை

← பாடல் 1608பாடல் 1610 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்