நூல்கள்›நற்றிணை›பாடல் 1600

பாடல் 1600

பரணர்

தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்

தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து

இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,

உருள் பொறி போல எம் முனை வருதல்,

அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் . . . .

பெருந் தோட் செல்வத்து இவளினும் - எல்லா!

எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை

விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்

கூந்தல் முரற்சியின் கொடிதே; . . . .

மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.

நெய்தல்

← பாடல் 1599பாடல் 1601 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்