நூல்கள்›நற்றிணை›பாடல் 1598

பாடல் 1598

வெறி பாடிய காமக்கண்ணியார்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் . . . .

காதல் செய்தவும் காதலன்மை

யாதனிற்கொல்லோ? - தோழி! - வினவுகம்,

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.

குறிஞ்சி

← பாடல் 1597பாடல் 1599 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்