நூல்கள்›நற்றிணை›பாடல் 1592

பாடல் 1592

பெருந்தலைச் சாத்தனார்

தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,

ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,

உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,

நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,

துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் . . . .

பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,

குவளை நாறும் கூந்தல், தேமொழி

இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,

'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின்,

அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. . . . .

பாலை

← பாடல் 1591பாடல் 1593 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்