நூல்கள்›நற்றிணை›பாடல் 1578

பாடல் 1578

காசிபன் கீரனார்

'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,

பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,

தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்

கார் வரு பருவம்' என்றனர்மன் - இனி,

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், . . . .

அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்

பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்

இன மயில் மடக் கணம் போல,

நினை மருள்வேனோ? வாழியர், மழையே!

முல்லை

← பாடல் 1577பாடல் 1579 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்